mullaavin kathaikal

முல்லாவின் கதைகள்
வேதாந்த நூல்
ஒரு தடவை முல்லா திருமணத்துக்குச் சென்றார்
.இரண்டொரு தடவை அவர் திருமனத்திருக்கு  சென்று திரும்பிவந்து பார்த்தபோது அவருடைய செருப்பு காணாமல் போய்விட்டது  அதனால் அன்று செருப்பை வெளியே விட்டுச் செல்ல மனம் வரவில்லை. அந்தக் காலத்தில் செருப்பணிந்து காலுடன் வீட்டுக்குள் நடமாடக் கூடாது . செருப்புகளை இழக்க விரும்பாத முல்லா அவற்றைக் கழற்றி ஒரு துணியில்  சுற்றிக் கையில் வைத்துக் கொண்டார். முல்லாவின் கையில் எதோகாகிதப் பொட்டலம் இருப்பதைக் கண்ட  திருமண வீட்டுக்காரர் , முல்லா அவர்களே  எதோ காகிதப் பொட்டலத்தை வைத்திருக்கிறீரே , அதில் என்ன இருக்கிறது  ? மணமகனுக்கு அளிக்க வேண்டிய பரிசா ? என்று கேட்டார். அது மிகவும் புனிதமான ஒரு வேதாந்த நூல்  என்று முல்லா பதிலளித்தார் . வேதாந்த நூலா ?  இதை எங்கே வாங்கினீர் ? என திருமண வீட்டுகாரர் வினவினார் .செருப்புக் கடையில்  வாங்கினேன் என்று முல்லா பதிலளித்தார் .அவர் என்ன பதிலளித்தார் என்று விளங்கிக்கொள்ள முடியாமல் திருமண வீட்டுகாரர் தத்தளித்தார் .

முல்லா அணைத்த நெருப்பு

ஒரு தடவை முல்லா வியாபார விஷயமாக வெளியூர் சென்றார் . வியாபார அலுவல்கள் முடிந்த பிறகு  அன்று இரவு பொழுதைக் கழிப்பதற்க்காக ஒரு விடுதியில்  தங்கினார். மிகவும் சாதாரணமாக உடையணிந்திருந்த  முல்லாவை விடுதி வேலைக்காரர்கள் கொஞ்சமும் மதிக்கவில்லை. சரியானபடி உபசரிக்கவில்லை  . இரவு திடீரென அவருக்குத் தண்ணீர் தாகம் எடுத்தது . வெலைக்காரகலைக் கூப்பிட்டு  தமக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்று கேட்டார்  . வேலைக்காரர்களோ அவரைக் கொஞ்சமும் லட்சியம் செய்யவில்லை . கும்பலாக அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தனர்  . முல்லாவுக்கோ நாவறச்சி அதிகமாக இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்.அவருக்கு யோசனையொன்று தோண்டியது. திடீரென அவர் நெருப்பு! நெருப்பு பற்றிக் கொண்டு விட்டது  எனக் கூக்குரல் போட்டார். வேலைக்காரார்கள் பதறியடித்துக் கொண்டு  ஆளுக்கு ஒரு குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு ஓடி வந்தார்கள் .முல்லாவைப் பார்த்து  எங்கே தீப்பற்றிக் கொண்டது ? என்று பரபரப்புடன் கேட்டார்கள் .முல்லா சாவதானமாக ஒரு குவளையை எடுத்து அவர்கள் கொண்டு வந்திருந்த குடம் ஒன்றிலிருந்து நீரை எடுத்து வயிறார  குடித்தார்.அவர் தாகம் அடங்கியது .நெருப்பு பற்றிக் கொண்டதாக சொன்னீரே எங்கே ? என்று வேலைக்காரார்கள்  கேட்டார்கள்.நெருப்பு என் வயிற்றில்தான் பற்றிக் கொண்டு எரிந்தது. இப்போது தண்ணீர் விட்டு அனைத்து விட்டேன் என்று கூறிவிட்டுச் சிரித்தார் முல்லா  .

கருத்துகள்