மறுமைக்காக பாடுபடு உலக இச்சைகளை விடு.

மறுமைக்காக பாடுபடு உலக இச்சைகளை விடு.

நாம் முஸ்லிம்கள் நமக்கு சொர்க்கம் நிச்சயம் என்று. கடமைக்கு தொழுதுக்
கொண்டு பிற மத சகோதரர்கள் போலவே உலக வாழ்க்கையில் லயித்துக் கொண்டு.
சின்னஞ்சிறு விஷயத்திர்க்கெல்லாம் சண்டைப் போட்டுக்கொண்டும் மரத்தின்
சிறு கிளை தன் வீட்டின் முகப்பில் பட்டாலும். தன் அண்டை வீட்டாரிடம்

வம்புக்கு நின்றுக்கொண்டு. மல்லுக்கட்டும் முஸ்லீம் சகோதரர்களே ! நாம்
என்றும் நிலைத்து வாழ்ந்திடுவோமா ? எதற்காக இந்த உலக வாழ்க்கையை மட்டும்
தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள். அதோடு முடிந்துவிட்டது என்று நினைத்துக்
கொண்டீர்களா ? இல்லையே !


மறுமை இருக்கின்றதே. எதை நாம் செய்து வைத்திருக்கின்றோம். இந்த அண்டை
வீட்டாரின் மரம் விஷயத்தையோ அல்லது ஒரு சாண் நிலத்தில் ஏற்படும்
பிரச்சனையையோ நாம் விட்டுக் கொடுத்தாலும் அது தர்மமாகிவிடும். அல்லவா ?

இந்த தர்மத்தில் உழைப்போ, அல்லது மெனக்கீடோ எதுவும் கிடையாது.

79:37எனவே, எவன் வரம்பை மீறினானோ-

79:38இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-

79:39அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.

ஆக விட்டுக் கொடுக்கும் தன்மை கூட இல்லாமல். நாம் மருமைக்காகப் பாடு
பட்டவர்களா ? அல்லது மறுமையில் எமாற்றதிர்க்காக பாடு பட்டவர்களா ?



வாழ்விலும், இறப்பிலும், சோதனை நமக்கு
67:2 உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக
அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்)
மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.

சகோதர சகோதரிகளே ! அல்லாஹ்வின் இந்த தூய வார்த்தையை கருத்தில் கொண்டு.
நம்முடைய செயல்கள் தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற அடிப்படை
கடமைகளிலிருந்து விலகிடாமல் இன்னும் ஏக இறைவனாம் அல்லாஹ் ( ஜல் )
தஆலாவுக்கு எந்த வகையிலும். இணை கர்ப்பிக்காமல்

நமக்கு வரும் சில துன்பங்களை சகித்தும், வீண் விரயம் செய்யாமல். நம்
குழந்தைகளையும் தீன் அடிப்படையில் வளர்த்து வந்தால் நமக்கு வெற்றி
நிச்சயம்.
அல்லாமல் எப்பொழுதும், சினிமா சீரியல் என்று நம் சிந்தனையை மழுங்கடித்து.
எப்பொழுதும். கண்ணீர் சீரியல் பார்த்து நம் பொன்னான நேரங்களை
வீணடித்தால். நிச்சயமாக இதற்க்கு இறைவனிடத்தில் பதில் சொல்லியாகவேண்டும்.
அதே கண்ணீரோடு.

சீரியலும் கண்ணீர் அதனை பார்ப்போரும் கண்ணீர் விடவேண்டியுள்ளது. பிறகு
மறுமையிலும் தொடர்ந்து கண்ணீரா ?

என்ன ஒரு சூனியமான வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருக்கிறீர்கள்.

இப்படிப்பட்ட வாழ்வும் அதன் பிறகுள்ள இறப்பும் இறைவனிடத்தில் நாம்
சோதனையாக சமர்பித்தால் மறுமையில் அழிவு நிச்சயம்.

மாறாக நல்ல விதமான செயல்பாடுகளை செய்து. இறைவனிடத்தில் வெற்றியை பெற்றுக்
கொள்வோமாக.

சுவர்க்கங்களில் கண்ணியப் படுத்தப்பட்டவர்களாக

சகோதரர்களே ! நம்மில் நயீம் என்ற சொர்க்கம் வேண்டும் என்றும். பிர்தவ்ஸ்
என்ற சொர்க்கம் வேண்டும் என்றும் அல்லாஹ்விடம் வேண்டிக்கொள்வோம். ஆனால்
இத்தகைய காரியங்களிலிருந்தும். விலகிக் கொண்டால் தான் அது நமக்கு
நிச்சயம். அதோடு மட்டும் அல்லாமல் தொழுகையை கடைபிடித்துக்கொண்டும்
இருக்கவேண்டும்.

அது எந்த ? வகையான காரியங்களிலிருந்து விலகிக் கொல்லனும்.

விபசாரம் செய்யக்கூடாது.

அமானிதப் பொருளிலும், மற்றும் வாக்குறுதியிலும் ஒழுங்காக இருக்கக்
கற்றுக்கொல்லனும் .

ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று சொல்லிவிட்டு. அவர் உங்களை நம்பி இருக்க
கடைசியில் வந்து இல்ல இப்ப சிரமமாக உள்ளது. அதனால் வேற யாரிடமாவது
பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்வது.வாக்கு மீறுதல்.

அடுத்து. சாட்சி சொல்வதில் ஏமாற்றுவது. அல்லது பின்வாங்குவது. அதில் நாம்
உறுதியாக இருக்கணும்.

70:23 (அதாவது) தம் தொழுகையின் மீது நிலைத்திருக்கின்றார்களே அவர்கள்.


70:24 அவர்களது பொருள்களில் (பிறருக்கு) நிர்ணயிக்கப்பட்ட பங்கு உண்டு.


70:25 யாசிப்போருக்கும் வறியோருக்கும் (அவர்களின் பொருட்களில் பங்குண்டு).

70:26 அன்றியும் நியாயத் தீர்ப்பு நாள் உண்டென்பதை (மெய்ப்படுத்தி)
உறுதிகொள்பவர்கள்.


70:27 இன்னும் தம்முடைய இறைவன் (வழங்கக் கூடிய) வேதனைக்கு அஞ்சியவாறு
இருப்பார்களே அவர்கள்.


70:28 நிச்சயமாக அவர்களுடைய இறைவன் (வழங்கக்கூடிய) வேதனை அச்சப்படாது
இருக்கக் கூடியதல்ல.


70:29 அன்றியும், தங்கள் மறைவிடங்களை (கற்பை) பேணிக் கொள்கிறார்களே அவர்கள்-


70:30 தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக்
கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள்
(இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.


70:31 எனவே எவரேனும் இதற்கப்பால் (உறவு கொள்வதைத்) தேடினால் அவர்கள்
(இறைவன் விதித்த) வரம்பை மீறியவர்கள்.


70:32 இன்னும் எவர்கள் தம் அமானிதங்களையும் தம் வாக்குறுதிகளையும் பேணிக்
கொள்கின்றார்களோ அவர்கள்.


70:33 இன்னும், எவர்கள் தங்கள் சாட்சியங்களில் உறுதியுடன் இருக்கிறார்களோ அவர்கள்.


70:34 எவர்கள் தங்கள் தொழுகைகளைப் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.


70:35 (ஆக) இத்தகையோர் தாம் சுவர்க்கங்களில் கண்ணியப்
படுத்தப்பட்டவர்களாக இருப்பார்கள்.

உன்னிப்பான சட்டங்கள்
இத்தாவை பொறுத்தவரை நான்கு மாதம் பத்து நாள் என்று வெளிப்படையாக நாம்
தெரிந்து வைத்திருந்தாலும். திருமணம் ஆன பெண்ணாலானும் கணவன் தொடாத
நிலையில் விவாகரத்து பெற்றுவிட்டால்; அந்தப் பெண் இத்தா இருக்கவேண்டிய
அவசியமில்லை என்பதை இந்த குர்ஆன் வசனம் சுட்டிக் காட்டுகின்றது

33:49 ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்களை நீங்கள் மணந்து,
பிறகு நீங்கள் அவர்களை தொடுவதற்கு முன்னமேயே ``தலாக்" செய்து
விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக் கூடிய
(இத்தத்)தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை - ஆகவே அவர்களுக்குத் (தக்கதாக) ஏதேனும் கொடுத்து அழகான முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள்.. [அல்குர் ஆன் ]

கருத்துகள்