31:17. “என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக; நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக; உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக; நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்.
நாம் தொழுகை விடயத்தில் இன்னும் அலட்சியமாகத்தான் இருக்கிறோம் . வாரம் ஒரு முறை தொழுபவர்களும் இருக்கிறார்கள். வருடம் இருமுறை பள்ளிக்கு வருபவர்களும் இருக்கிறார்கள் . இன்று தொழுவோம் நாளை தொழுவோம் என்று நாம் காலத்தை தான் கடத்திக் கொண்டு போகிறோம் . மரணம் நமக்கு பின்னால் தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது . நாம் தொழுதால் நமக்குதான் நன்மை , தொழாமல் இருந்தால் அல்லாஹ்வுக்கு எந்த நஷ்ட்டமும் இல்லை . அல்லாஹ் தேவையற்றவன் . நாம் தேவையுள்ளவர்கள் என்பதை நாம் ஆழமாக சிந்திப்பதில்லை . கஷ்ட்டம் வந்தால் அல்லாஹ்வை அழைக்கிறோம், சந்தோசமாக இருக்குபோது அல்லாஹ்வை மறந்து ஆட்டம் போடுகிறோம் இதுதான் எதார்த்தமாக நடந்துக் கொண்டிருக்கிறது . மறுமையில் முதல் முதலாக கேட்கப்படும் கேள்வி ''தொழுகை'' அது சீராக இருந்தால் எல்லாம் சீராக அமைந்துவிடும். மாறாக ....???
அல்லாஹ் நம்மை தொழக்கூடிய கூட்டத்தில் சேர்ப்பானாக . ஆமீன் ..
31:18. “(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
அல்லாஹ் ஒருவரை நேசிக்கவில்லை என்றால் அவரின் நிலை என்ன ஆகும்?? அவர் அல்லாஹ்வின் கருணையின் பார்வையிலிருந்து தூரமாக ஆகிவிடுவார் . ஒரு மனிதனுக்கு எப்பொழுது ஆணவம் வரும் ? பதவி , செல்வம் , செல்வாக்கு , பணம் . இவைகளில் இருந்து வரலாம் . வராமல் இருக்க என்ன செய்வது.? பதவியை கொடுப்பது அல்லாஹ் ! செல்வத்தையும், பணத்தையும் கொடுப்பது அல்லாஹ் ! அவைகளை சிலருக்கு கொடுத்து சோதித்துப் பார்க்கிறான் . அதில் சாதனை செய்பவர்களும் உண்டு , சோதனையில் தோல்வியை அடைபவர்களும் உண்டு. '' இந்த செல்வம் , பணம் நான் என் திறமையால் சம்பாதித்தது ! என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள்தானே ! இது ஆணவம் கொண்டு சொல்லும் வார்த்தை . அல்லாஹ் நம்மை எப்பொழுதும் நேசிக்க வேண்டும் . அல்லாஹ்வின் அருள் எந்தநேரமும் நம்மை சூழ்ந்து இருக்க வேண்டும். பெருமை , ஆணவம் , திமிரு இன்னும் சில கெட்ட செயல்களை நாம் அகற்றிட வேண்டும் . அல்லாஹ்வின் அருளை பெற்றிட வேண்டும். அல்லாஹ்வின் நேசர்களாக ஆகிட வேண்டும்.
நாம் தொழுகை விடயத்தில் இன்னும் அலட்சியமாகத்தான் இருக்கிறோம் . வாரம் ஒரு முறை தொழுபவர்களும் இருக்கிறார்கள். வருடம் இருமுறை பள்ளிக்கு வருபவர்களும் இருக்கிறார்கள் . இன்று தொழுவோம் நாளை தொழுவோம் என்று நாம் காலத்தை தான் கடத்திக் கொண்டு போகிறோம் . மரணம் நமக்கு பின்னால் தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது . நாம் தொழுதால் நமக்குதான் நன்மை , தொழாமல் இருந்தால் அல்லாஹ்வுக்கு எந்த நஷ்ட்டமும் இல்லை . அல்லாஹ் தேவையற்றவன் . நாம் தேவையுள்ளவர்கள் என்பதை நாம் ஆழமாக சிந்திப்பதில்லை . கஷ்ட்டம் வந்தால் அல்லாஹ்வை அழைக்கிறோம், சந்தோசமாக இருக்குபோது அல்லாஹ்வை மறந்து ஆட்டம் போடுகிறோம் இதுதான் எதார்த்தமாக நடந்துக் கொண்டிருக்கிறது . மறுமையில் முதல் முதலாக கேட்கப்படும் கேள்வி ''தொழுகை'' அது சீராக இருந்தால் எல்லாம் சீராக அமைந்துவிடும். மாறாக ....???
அல்லாஹ் நம்மை தொழக்கூடிய கூட்டத்தில் சேர்ப்பானாக . ஆமீன் ..
31:18. “(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
அல்லாஹ் ஒருவரை நேசிக்கவில்லை என்றால் அவரின் நிலை என்ன ஆகும்?? அவர் அல்லாஹ்வின் கருணையின் பார்வையிலிருந்து தூரமாக ஆகிவிடுவார் . ஒரு மனிதனுக்கு எப்பொழுது ஆணவம் வரும் ? பதவி , செல்வம் , செல்வாக்கு , பணம் . இவைகளில் இருந்து வரலாம் . வராமல் இருக்க என்ன செய்வது.? பதவியை கொடுப்பது அல்லாஹ் ! செல்வத்தையும், பணத்தையும் கொடுப்பது அல்லாஹ் ! அவைகளை சிலருக்கு கொடுத்து சோதித்துப் பார்க்கிறான் . அதில் சாதனை செய்பவர்களும் உண்டு , சோதனையில் தோல்வியை அடைபவர்களும் உண்டு. '' இந்த செல்வம் , பணம் நான் என் திறமையால் சம்பாதித்தது ! என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள்தானே ! இது ஆணவம் கொண்டு சொல்லும் வார்த்தை . அல்லாஹ் நம்மை எப்பொழுதும் நேசிக்க வேண்டும் . அல்லாஹ்வின் அருள் எந்தநேரமும் நம்மை சூழ்ந்து இருக்க வேண்டும். பெருமை , ஆணவம் , திமிரு இன்னும் சில கெட்ட செயல்களை நாம் அகற்றிட வேண்டும் . அல்லாஹ்வின் அருளை பெற்றிட வேண்டும். அல்லாஹ்வின் நேசர்களாக ஆகிட வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக
your comment is welcomed!