மதீனாவை தரிசிப்பவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்

1) நபியவர்களிடம் பிராத்தித்தல் அல்லது தனது கஷ்டத்தை போக்குமாறு, தனது
தேவையை நிறைவு செய்து தருமாறு உதவி தேடி வேண்டுதல் வைத்தல் ஆகிய
அனைத்தும் அல்லாஹ்விடம் மாத்திரம் கேட்கப்பட வேண்டியவைகளாகும்। காரணம்
பிரார்த்தனை எமது மார்க்கத்தில் ஒரு வணக்கமாக
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை நபியவர்களே பின்வருமாறு கூறினார்கள் ‘
துஆ (பிரார்த்தனை) அது ஒரு வணக்கமாகும்.’ அபூதாவூத், திர்மிதி.

எனவே வணக்கம் என்பது அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்யப்பட வேண்டியதாகும்।
இது அல்லாஹ்வுக்குக் கொடுக்கக் கூடிய உரிமை. இதனை யாராவது மற்றவர்களுக்கு
கொடுத்து விடுவாரேயானால் அவர் அல்லாஹ்வின் உரிமையில் கை வைத்தவர்
ஆகிவிடுவார். அதே வேலை இவ்வாறு அல்லாஹ் அல்லாதவரை அழைத்து
பிராத்திக்கும்போது (அது நபியாக இருந்தாலும்) அல்லாஹ்வோடு நபியை
இணையாக்கி விட்டோம் என்ற அல்லாஹ் மன்னிக்காத ஷிர்க் என்ற பாவத்தை
செய்தவர்களாக கணிக்கப்பட்டு விடுவோம்.


நபியவர்கள் கூட எங்களைப் போன்று சாதாரணமாக தனது தேவைகளை அல்லாஹ்விடம்
கேட்டிருக்கின்றார்கள்। பொதுவாக கப்ரிலே அடங்கப்பட்டிருக்கின்ற யாரிடமும்
எமது தேவையை முன்வைக்க முடியாது. நபியவர்கள் கப்ரிலே ‘பர்ஸஹ்’
(திரையிடப்பட்ட வாழ்கையில்) இருக்கின்றார்கள். இவ்வாழ்கை எவ்வாறு
இருக்கும் என்பது அல்லாஹ்வுக்கு மாத்திரமே தெரியும். இந்த ‘பர்ஸஹ்’; உலக
வாழ்க்கைகும் நாம் அனைவரும் எழுப்படும் மறுமை வாழ்க்கைக்கும் இடைப்பட்ட
ஒரு வித்தியாசமான வாழ்க்கையாகும்.

எனவே உயிரோடு நபியவர்கள் இருக்கும் போது ஸஹாபாக்கள் நபியவர்களிடம் சென்று
யா ரஸுலுல்லாஹ் எனக்காக அல்லாஹ்விடம் பிராத்தியுங்கள் என்று கேட்டதை
ஆதாரமாக கொண்டு நாமும் எமது தேவையை நபியவர்களிடம் சென்று கேட்க்க
முடியாது। காரணம் இப்பொழுது நபியவர்கள் இருக்கும் வாழ்க்கையை நாம் யாருமே
அறியமாட்டோம். அதே வேலை பிரார்த்தனை என்ற வணக்கத்தை அல்லாஹ் அல்லாதவரிடம்
செய்ய முடியாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அதே வேலை மதீனாவில் இருக்கூடிய சில இடங்களை மக்கள் தாமாகவோ அல்லது தமது
உலமாக்கள் மூலமாகவோ இது பாத்திமா (ரழி)யின் கபுரு, இது அலி (ரழி) யின்
கப்ர், இது இன்ன ஸஹாபியின் கப்ர் என்று நினைத்துக் கொண்டு அந்த
இடங்களுக்குச் சென்று அவர்களிடம் தமது தேவைகளை கடிதங்களில் எழுதி கட்டி
வைப்பதும் அல்லது துனிகளில் வைத்து கட்டி வைப்பதையும் காண்கின்றோம்।

(மொழி பெயர்ப்பாளனின் அனுபவம்: 2009ம் ஆண்டு ஹஜ்ஜின் போது ‘ஹன்தக்’
பிரதேசத்தில் ஹாஜிகளுக்கு மொழிபெயர்பாலனாக கடமையாற்றிய போது அல்லாஹ்வை
மறந்து ஸஹாபாக்களிடம் தமது தேவைகளான நோய், காதல் பிளவு போன்றவற்றை
முறையிட்டு எழுதியிருந்த கடிதங்களை கண்கூடாக பார்க்கக் கிடைத்தது।) எனவே
இது மிகப் பெரும் ஷிர்க் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

2) நபியவர்களின் கப்ர் இருக்கும் இடத்திற்கு செல்லும் போது இரண்டு
கைகளையும் நெஞ்சிலே வைத்து தொழுகையில் நிற்பது போன்று நிற்பது கூடாது।
அல்லாஹ்வின் முன்னிலையில் மாத்திரம் தான் இவ்வாரு சிறுமையாக பணிவை
வெளிக்காட்டி தொழுகையில் நிற்க வேண்டும். நபியவர்களுடைய தோழர்கள்
நபியவர்களுடைய கப்ரை தரிசிக்க வரும் போது இவ்வாறு இரு கைகளையும் நெஞ்சின்
மீது வைத்துக் கொண்டு வரவில்லை. இச்செயலின் மூலம் நன்மை கிடைக்கும்
என்றால் ஸஹாபாக்கள் நிச்சயமாக செய்திருப்பர். எனவே நாமும் இதனை
தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

3) நபியவர்களது கப்ரை சூழவுள்ள சுவரை அல்லது ஜன்னல்களை தடவுதல்
முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒரு செயலாகும்। இவ்வாரான ஒரு வழிகாட்டலை
நபியவர்கள் எமக்கு போதிக்கவில்லை. அதே வேலை எமக்கு முன்னிருந்தவர்கள் கூட
இவ்வாறு தொட்டு முகர்ந்து கொள்ளவில்லை. மாறாக இது எம்மை ஷிர்க் எனும்
இணைவைத்தலுக்கு அழைத்துச் சென்று விடும். இவ்வாறு செய்யக் கூடியவர்கள்
நபியவர்கள் மீதுள்ள அன்பினால் நான் இவ்வாறு செய்கின்றேன் எனலாம். ஆனால்
நபியவர்கள் மீதுள்ள அன்பு ஒவ்வொரு முஸ்லிமினதும் உள்ளத்தில் இருக்க
வேண்டும். தனது பிள்ளைகள், பெற்றோரை விடவும் நபியவர்களை அன்பு வைக்க
வேண்டும். ஆனால் அந்த அன்பை இவ்வாறு சுவரை, ஜன்னலை தொட்டு முகர்ந்து
வெளிப்படுத்த முடியாது. அன்பை ஒரு முஸ்லிம் எவ்வாறு வெளிப்படுத்த
வேண்டும் என்றால் நபியவர்களை முழுமையாக பின்பற்றுவதன் மூலம் தான்
அல்லாஹ்வின் அன்பைக் கூட பெறமுடிகின்றது.அல்லாஹ் இதனை பின்வருமாறு
கூறுகின்றான்.

(நபியே!) நீர் கூறும், ‘நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப்
பின்பற்றுங்கள், அல்லாஹ் உங்களை நேசிப்பான், உங்கள் பாவங்களை உங்களுக்காக
மன்னிப்பான், மேலும் அல்ல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை
உடையவனாகவும் இருக்கின்றான்। (ஆல இம்ரான்-31)

நபியவர்களை நல்ல முறையில் பின்பற்றுவதன் மூலமாகத்தான் அவர்களது அன்பையும்
அல்லாஹ்வின் அன்பையும் பெறமுடிகின்றது என்பதை மேற்படி வசனத்தின் மூலம்
விளங்கலாம்। நபியவர்களின் மீது அன்பு வைத்தலைப் பற்றி பல ஹதீஸ்கள்
வந்திருக்கின்றன. ‘யார் ஒருவர் தனது தந்தை, பெற்றோர், பிள்ளைகள் மற்றும்
உலக மக்கள் அனைவரையும் விடவும் என்னை நேசிக்காதவரை முஃமினாக மாட்டார்.’
புகாரி, முஸ்லிம்.இதை விட ஒருபடி மேலேரி உமர் (ரழி) அவர்களுக்கு தனது
உயிரை விட என்னை நேசிக்க வேண்டும் என்று நபியவர்கள் வழிகாட்டினார்கள்.
புகாரி.

காரணம் நாம் இன்று முஸ்லிமாக இருக்கின்றோம் என்றால் அதற்கு நபியவர்களைக்
கொண்டுதான் அந்த பாக்கியத்தை அல்லாஹ் எமக்கு வழங்கியுள்ளான்। உலகில்
இருக்கக்கூடிய மார்க்கங்களில் உண்மையான மார்க்கத்தை பின்பற்றுவது மிகப்
பெறும் அருட்கொடையாகும். எனவே இந்த அருட்கொடையை நபியவர்களின் மூலமாக
பெற்ற நாம் அவர்கள் காட்டித்தந்த மார்க்கத்தை தூயவடிவில் பின்பற்ற
வேண்டும். எமது இபாதத்துக்களை அவர் சொல்லித்தந்த அமைப்பிலே மாற்றிக்
கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் நபியை நேசிப்பவராக முடியும். ஒருவரை
நேசிக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு அவருக்கு மாறு செய்யும் போது அது
அவர் மீது வைத்துள்ள உண்மையான நேசமாக முடியாது. அவரை ஏமாற்றுவதாகத் தான்
இருக்க முடியும்.

இஸ்லாத்திலே எந்த ஒரு செயலும் நல்ல அமல் என்ற அந்தஸ்தை அடைய வேண்டும்
என்றால் மேலும் அது அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றால்
அதற்கு இரு நிபந்தனைகள் இருக்கின்றன।

1) செய்யக் கூடிய செயல் அல்லாஹ்வுக்காக மட்டும் என்ற தூய எண்ணம்
(இஹ்லாஸ்)2) குறித்த செயல் நபியவர்கள் காட்டித்தந்த அடிப்படையில் எந்த
கூட்டல் குறைத்தலும் இல்லாமல் செய்தல் (முதாபஆ)

இவை இரண்டில் ஏதாவது ஒன்றில் குறை ஏற்படும் போது குறித்த செயலை எவ்வளவு
பிரயத்தனங்களுக்கு மத்தியில் செய்திருந்தாலும் அதற்கு அல்லாஹ்விடத்திலே
எந்த பெருமதியும் இல்லாது போய்விடும்।

ஆல இம்ரான் அத்தியாயத்தின் 31ம் வசனமாகிய
(நபியே!) நீர் கூறும், ‘நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப்
பின்பற்றுங்கள், அல்லாஹ் உங்களை நேசிப்பான், உங்கள் பாவங்களை உங்களுக்காக
மன்னிப்பான், மேலும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும்
இருக்கின்றான்।

இவ்வசனத்தை சில அறிஞர்கள் சோதனையான வசனம் என்கிறார்கள்। இமாம் ஹஸனுல்
பஸரி அவர்கள் குறிப்பிடும் போது ‘சிலர் தான் அல்லாஹ்வை விரும்புவதாக
சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் அல்லாஹ் அவர்களை இவ்வசனத்தின்
மூலம் சோதிக்கின்றான்.’

இமாம் இப்னு கஸீர் அவர்கள் இவ்வசனத்திற்கு விளக்கம் அளிக்கும் போது
‘நபியவர்களின் வழியை பின்பற்றாது அல்லாஹ்வை விரும்புகின்றோம் என
வாதிடுவோருக்கு இந்த கண்ணியமான வசனம் தீர்ப்பளிக்கின்றது। நபியவர்கள்
கொண்டு வந்த அந்த உண்மையான மார்க்கத்தை தனது எல்லா சொல், செயலும்
பின்பற்றாத வரை இவ்வாதம் பொய்பிக்கப்படுகின்றது. புகாரியிலே பதிவு
செய்யப்பட்டுள்ள ஹதீஸிலே நபியவர்கள் கூறும்போது (யார் எமது விடயத்திலே
(மார்க்கத்தில்) எமது அனுமதி இல்லாமல் ஒரு செயலை செய்கின்றாரோ அது
நிராகரிக்கப்படும்.)

எனவே தான் மேற்படி வசனத்திற்கு விளக்கம் கூறும் சிலர் ‘நாம் ஒன்றை
விரும்புவதை விட நம்மை (எவர் விரும்புகின்றாரோ அவரை) விரும்புவது
முக்கியமாகும்’ எனவே அல்லாஹ்வை நாம் விரும்புகின்றோம் என வாதிடுவதை
விட்டு விட்டு அல்லாஹ் எம்மை விரும்புவதற்கு காரணமாக இருக்கும்
நபியவர்களை பின்பற்றுதல் எம்மில் வந்தாக வேண்டும்’ என்றார்।

நபியவர்களது கப்ரைச் சூழவுள்ள சுவர்களை தொட்டு முகர்வதைப் பற்றி இமாம்
நவவி அவர்கள் கூறும் போது ‘ இது மார்க்கத்திற்கு முறனான கண்டிக்கத்தக்க
செயலாகும்’ என தனது புத்தகமாகிய (அல்மஜ்மூஃ) இல் குறிப்பிடுகின்றார்।

நபியவர்கள் கூறினார்கள் ‘ யார் எமது மார்க்கத்தில் புதிதாக ஒரு கருமத்தை
ஏற்படுத்துகின்றாரோ அது நிராகரிக்கப்படும்।’ புகாரி.

அதே வேலை அபூஹுரைரா (ரழி) அறிவிக்கும் மற்றும் ஒரு அறிவிப்பில் ‘ எனது
கப்ரை பெருநாள் (கொண்டாடும் இடம்) போன்று ஆக்கி விடாதீர்கள்। என் மீது
ஸலவாத்து சொல்லுங்கள் உங்கள் ஸலவாத்து நீங்கள் எங்கிருந்த போதிலும் என்னை
வந்தடையும்.’ அபூதாவூத்.

இமாம் அல் புலைல் இப்னு இயால் (ரஹ்) இவ்ஹதீஸுக்கு விளக்கம் கூறும் போது
‘நேர் வழியை சொற்ப எண்ணிக்கையினர் பின்பற்றினாலும் அது உனக்கு தீங்கு
தராது நீ நேர் வழியை பின்பற்று। அழிவின் பக்கம் (வழிகேட்டில்)
பெரும்பான்மையினரான மக்கள் இருந்த போதிலும் வழிகேட்டை பின்பற்றுவதை
விட்டும் உன்னை எச்சரிக்கின்றேன்’ என்றார்.

அறியாமையுடன் கப்ரைத் தொடுவது, முத்தமிடுவது என்பன பரக்கத்தை
தந்துவிடாது। இச்செயல் வன்மையாக கண்டிக்கத் தக்கவையாகும். மேலும்
பரக்கத்து என்பது மார்க்கத்திற்கு உடன்பாடான விடயங்களில் தான் இருக்க
முடியும். சத்தியத்திற்கு மாற்றமாக செயற்பட்டு விட்டு பரக்கத்தை எவ்வாறு
எதிர்பார்க்க முடியும்? இதனை எந்த ஒரு பகுத்தறிவாளனும் ஏற்றுக்
கொள்ளமாட்டான்.

4) நபியவர்களின் கப்ரைச் சுற்றி வலம் வருதல் தடை செய்யப்பட்டதாகும்
இச்செயல் மிகவும் கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளது। காரணம் அல்லாஹ் அவனது
முதலாவது ஆலயமாகிய கஃபாவை மாத்திரம் தான் வலம் வருவதை (தவாப்)
மார்க்கமாக்கியுள்ளான்.

அல்லாஹ் கூறுகின்றான், பின்னர் அவர்கள் (தலைமுடி இறக்கி நகம் வெட்டி
குளித்துத்) தம் அழுக்குகளை நீக்கி தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி
(அந்தப் புனிதமான) பூர்வீக ஆலயத்தை ‘தவாஃபும்’ செய்ய வேண்டும்। (அல்
ஹஜ்-29)

இஸ்லாத்தில் தொழுகை, நோன்பு, ஸகாத் போன்ற அமல்களை உலகின் எப்பகுதியில்
இருந்தாலும் நிறைவேற்றிக் கொள்ளலாம்। ஆனால் இந்த தவாப் எனும் வணக்கத்தை
மக்கா நகருக்கு செல்லாமல் நிறைவேற்ற முடியாது.

இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறும் போது ‘அல்லாஹ்வின் ஆலயமாகிய
(கஃபாவைத்) தவிர பைத்துல் முகத்தஸிற்கு அருகில் உள்ள குப்பதுஸ் ஸஹ்ராவையோ
அல்லது நபியவர்களது கப்ரையோ, அரபா மலையில் இருக்கும் அந்த அடையாளத்தையோ
தவாப் செய்யமுடியாது என்பதில் முஸ்லிம் அறிஞர்கள் ஏகோபித்த கருத்தில்
உள்ளனர்।’ என்கிறார்.

5) நபியவர்களது கப்ருக்கு அருகில் சத்ததை உயர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது
நபியவர்கள் உயிரோடு இருக்கும்போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற
ஒழுக்கத்தை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்।

முஃமின்களே! நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே உங்கள் சப்தங்களை
உயர்த்தாதீர்கள், மேலும் உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து
பேசுவதைப் போல் அவரிடம் நீங்கள் இரைந்து பேசாதீர்கள்। (இவற்றால்) நீங்கள்
அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்து போகும்.நிச்சயமாக
எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பு தங்களுடைய சப்தங்களைத் தாழ்த்திக்
கொள்கிறார்களோ அ(த்தகைய)வர்களின் இருதயங்களை அல்லாஹ் பயபக்திக்காகச்
சோதனை செய்கிறான் -அவர்களுக்கு மன்னிப்பும் மகத்தான கூலியும் உண்டு.
(ஹுஜ்ராத்-2,3)

இதிலிருந்து நபியவர்கள் உயிரோடு இருக்கும் போதும், மரணித்த பின்னரும்
கண்ணியத்துக்குரியவர்கள் என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்।

6) பள்ளிக்கு வெளியிலோ, பள்ளிக்கு உள்ளேயோ தூரத்தில் இருந்த போதிலும்
நபியவர்களது கப்ரை முன்னோக்கித்தான் அவர்கள் மீது ஸலாம் சொல்லியாக
வேண்டும் என எண்ணுவது தவறு:

இது தொடர்பாக நூலாசிரியரின் ஆசான் ஆகிய அஷ்ஷெய்க் பின் பாஸ் (ரஹ்) கூறும்
போது இச்செயல் ஒரு தூய்மையான நிலையில் இருந்து மிதமிஞ்சிய நிலைக்கு
இட்டுச்செல்லும் என்கின்றார்।

அதே வேலை சில மக்கள் மதீனாவுக்கு வரும்போது அதிகமான மக்களின் ஸலாத்தை
எத்திவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வருகின்றார்கள்। இச்செயலை
அங்கிகரிக்கூடிய வகையில் எந்த ஒரு ஆதாரத்தையும் நபிவழியில் காணமுடியாது.
இவ்வாறு யாரிடமாவது மக்கள் வந்து எனது ஸலாத்தை நபியவர்களுக்கு
எத்திவையுங்கள் என்று கூறினால் அதற்கு கீழ்கண்டவாறு பதில் கூறலாம்.

‘நபி (ஸல்) அவர்கள் மீது அதிகம் அதிகம் ஸலவாத்தும், ஸலாமும் கூறுங்கள்।
உங்கள் ஸலவாத்து நீங்கள் எங்கிருந்த போதிலும் அது மலக்குகளின் மூலமாக
நபியவர்களுக்கு எத்திவைக்கப்படும் என்று கூறி அவ்வாறு சொல்லுபவர்களுக்கு
தெளிவுபடுத்த வேண்டும். நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள் ‘நிச்சயமாக
மலக்குகள் பறந்து கொண்டிருக்கின்றனர் எனது உம்மத்தினரின் ஸலாத்தை அவர்கள்
எனக்கு எத்திவைப்பர்.’ நஸாயீலே பதியப்பட்ட நம்பகமான ஹதீஸாகும்.

மற்றும் ஒரு அறிவிப்பிலே ‘உங்கள் வீடுகளை கப்ருகளாக ஆக்கிவிடாதீர்கள்।
எனது கப்ரை பெருநாள் கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள். என் மீது
நீங்கள் ஸலவாத்து சொல்லுங்கள். நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களது
ஸலவாத்து எனக்கு எத்திவைக்கப்படும்.’ அபூதாவூத்

அதே வேலை ஹஜ், உம்ராவுக்கும் மதீனா ஸியாரவுக்கும் சம்மந்தம் கிடையாது
என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மதீனாவுக்கு வராமலே ஹஜ்ஜை
முடித்துவிட்டு அல்லது உம்ராவை முடித்து விட்டு தனது ஊருக்கு
திரும்பினால் கூட எந்தப் பிழையும் கிடையாது. அதே வேலை மதீனாவை
ஸியாரத்
செய்ய நேரடியாக இங்கு வந்து ஹஜ், உம்ரா செய்யாமல் திரும்பினால் கூட
அதற்குறிய நன்மை கிடைத்து விடும்.
நன்றி  ..unmai4u .blogspot .com 
அல்லாஹ் அவர்களுக்கு நற்கிருபைச் செய்வானாக!!!

கருத்துகள்