சீதனத்தால் சிதைந்து போகும் குடும்பங்கள் !

சீதனத்தால் சிதைந்து போகும் குடும்பங்கள் !
சீதனம் வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது உங்கள் நண்பன் போலிஸ்...சின் உள்ளத்தில் ஏற்பட்ட தாக்கம் இது

அழகான ஊர் எனது இறக்காமம் சிறிதானாலும் சிறப்பான ஊர் இறக்காமம் சொல்லொண்னா வேதனைகளின் சிக்கித்தவிக்கும் இறக்காமம் வருகிறேன் சீதனம் வாங்கி வெளிஊர் செல்லும் தரங்கெட்ட படித்த பட்டதாரிகளுக்கு பாடம் புகட்ட வருகிறேன்

படத்தில் உள்ளதுதான் எனது ஊர் பாடசாலை சிறப்பான அமைவிடத்தில் உள்ளது பாடசாலை ஆரம்பக் கல்விதான் சீதனம் வாங்கி வெளி ஊர் சென்றவர்களின் கல்விக்கு அத்திவாரம் இட பாடசாலை ஊர் நிலை அறியாது இஸ்லாத்தையும் ஊரின் நிலையையும் மறந்து பணத்தில் பித்தம் பிடித்து பிணமாகும் படித்த பட்டதாரிகள் அடிமட்ட வாழ்க்கைகளை மறந்து ஊர் விட்டு ஊர் சென்று திருமணம் முடிக்கும் தரங்கெட்ட பட்டதாரிகள் நிங்கள்தான் எங்களுக்கு முதல் எதிரிகள் ஜென்ம விரோதிகள் உங்களை எங்களால் ஒரு பொதும் மன்னிக்க முடியாது

வெளிஊர் பணக்காரர்களின் பிள்ளைகளுக்கு வால்வளிதுவிட்டு பின்னர் சிறியசுற்றுலா வரும் உங்களுக்கு நான் நல்ல விருந்து தருவதற்கு காத்து நிற்கின்றேன்

நிங்கள் விரும்பிய நல்ல அறிவு அழகு அந்தஸ்து ஏழைப் பெண்கள் எங்கள் ஊரில் இல்லையா சொல்லுங்கள் பார்ப்போம் உங்கள் காரணங்களில் நியாயம் உண்டா என்பதனையும் சொல்லுங்கள் பார்க்கலாம் முடிந்தால் என்னோடு பேசிங்கள்

(பணத்துக்காக பண்ணியது மொக்கு மொடக்கு கருப்பு இழுபறி அழிந்தது கேடுகெட்டது) இதைவிட நிங்கள் மரணிப்பதே சிறந்தது உழைக்க உடம்பில் பலம் இல்லாதவர்கள் இவர்கள்

நிங்கள் பிறப்பதற்கும் வளர்வதற்கும் படிப்பதற்கும் ஏற்றுக்கொண்ட ஊர் ஏன் உங்கள் திருமணத்திற்கு வெளி ஊர் தேவைப்படுகிறது சொல்லுங்கள் பார்ப்போம் நியாயத்தை எங்கள் ஊர் பிந்தங்குவதற்கும் பின்னடைவுகளுக்கும் நிங்கள்தான் முதல் காரணம்

சீதனம் என்ற கொடுமையான சமூக தீமையை இந்த இறக்காமம் முஸ்லிம் சமுதாயம் விட்டொழிக்காதவரை இத்தகைய நிகழ்சிகள் கண்டிப்பாக அரங்கேறும். அல்லாஹ் நீங்கள் பெண்களுக்கு மஹர் கொடுத்து திருமணம செய்யுங்கள் என்று கூறும் பொழுது, மானங்கெட்ட நம் படித்த முஸ்லிம் இளைஞர்கள் பெண்களிடம் சீதனம் வாங்கி திருமணம் செய்கின்றனர்; போன்னயர்கள்

மேலும் ஒட்டுமொத்த சமூகமும் ஒளிவு மறைவின்றி செய்யும் இந்த மாபாதக செயலால் சீதனம் கொடுக்க வசதியில்லாத பெண்கள் தவறான வழிக்கு செல்ல நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள். (என்னுடைய வாழ்க்கை நபி ஸல் வலியாகட்டும்) அல்லாஹ்வின் கட்டளைகளை இந்த சமுதாயம் மீறும்போது அதற்குண்டான தீய விளைவுகளையும் சந்தித்தே தீரும்.

சிதனத்தின் கொடுமை திருமணத்துடன் முடிவதில்லை மகளை திருமணம் முடித்த மருமகனுக்கு வேலையோ தொழிலோ இல்லை என்றால் அவனுக்கு வேலை வாங்கி தர வேண்டும் அல்லது தொழில் செய்ய முதலீடு தர வேண்டும். அல்லது வெளிநாடு செல்ல விஷா எடுத்து கொடுத்து ஃபிலைட் டிக்கட் எடுத்து கொடுத்து, அவன் பொருளீட்ட இப்படியான கொடுமைகளை பெண்ணை பெற்றோர் அனுபவிக்க வேண்டும்.இவன் மனைவியிடம் சுகம் அனுபவிப்பானாம்

அதன் காரணமாக கருவை (வாரிசுகளை) மனைவி சுமக்க ஆரம்பித்து விட்டால் அவளுடைய மருத்துவ செலவு முதல் பிரசவ செலவு வரை – அவனுடைய மனைவியை பெற்றவர்கள் செய்ய வேண்டுமாம், இந்த மாதிரியான இழிவான ஆன்பிறவிகளுக்கு எதற்கு வாரிசுகள்?. இந்த மாதிரியான கேடுகெட்டவர்களின் வாரிசுகளை மனைவியானவள் கருவிலேயே அழித்து விட வேண்டும். அதன் மூலம் தம் பெற்றோரின
சுமையை அவளால் குறைக்க முடியும்.

அதிலும் பெண்குழந்தை பிறந்து விட்டால் அந்த பிறந் பெண் குழந்தைக்கு இவ்வளவு நகை போட்டால்தான் தன் மனைவியையும் குழந்தையையும அழைத்து போவானாம். என்பவர்களும் நமதுஉரில் கொடுமையிலும் கொடுமை.சொந்த வீடு இல்லாதவனாக இருந்தால் அவனுக்கு வீடு கொடுக்க வேண்டும் அல்லது வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பான். நம்மவீட்டில் வந்து உக்கார்ந்து கொண்டு நம்மையே அதிகாரம் பண்ணுவானுங்க.

மாமனார்-மாமியார் சொத்தில் உரிமை கொண்டாடுவது – அவர்கள் குடும்ப விஷயத்தில் எல்லாவற்றிலும்.தலையிடுவது தன்னுடைய சுய நலத்துக்காக மாமனார்-மாமியார் குடும்ப விஷயத்தில் எடுக்கும் முடிவுகளில் சுதந்திரத்தில் தலையிட்டு அதிகாரம் செய்வது போன்ற கொடுமைகள்.

அதிலும் பெற்றோகள் இல்லாத மாப்பிள்ளை என்றால் இன்னும் பல கொடுமைகள்....அல்லது அவனை வளர்த்தவர்கள் வீட்டிலோ அல்லது அவன் எங்கிருந்து வளர்ந்தானோ அந்த வீட்டிற்கு மருமகளா இருக்க வேண்டிய கட்டாயம். தன் *மனைவி*க்க

கண்ணியம் கொடுத்து தன் *வீட்டுக்காரியாக* – தன் *இல்லத்துக்கு அரசியாக* இருக்க வேண்டிய வாழ்க்கைத்துணைவியை அவனை வளர்த்த வீட்டுக்கு அடிமையாக ஆக்கிவிடுகிறான்.

அதிலும் வெளிநாடு செல்லும் கணவாக இருந்தால் மனைவி எங்கே இருக்க வேண்டும். என்பதில் அவன் செய்யும் தவற(கொடுமை) மிகப்பெறியது. ஒரு பெண்ணிற்கு எங்கே அன்பும் அரவனைப்பும் ஆதரவும் பாதுகாப்பும் அதிகமோ. அதை விட்டு விட்டு தன் பெற்றோர்களிடம் விட்டு செல்வது. பின்பு மாமியார் மருகள் பிரச்சனை அவனுடைய வீட்டோடு இருக்கும் அக்கா தங்கையுடன் பிரச்சனை, அவனுடையஅண்ணன் தம்பியால் அவளுக்கு எற்படும் (கற்புக்கு) பிரச்சனை. இவற்றை அவளால் தாங்க முடியவில்லை என்றால் நாட

திரும்பியதும் மனைவியை தலாக் கொடுப்பது அல்லது இவற்றை தாங்க முடியாமல் இந்த புருஷனே வேண்டாம்

என்ற முடிவுக்கு வரும் மனைவியின் மிகக்கொடுமையான நிலைமை. இதையெல்லாம் தன்னை ஆம்பிள்ளை என்று சொல்பவன் சிந்திக்க வேண்டும் நான் ஆம்பிள்ளை என்று பொண்டாட்டியை மிரட்டுபவன் சிந்திக்க வேண்டும்.

பெண்ணை பெற்றவர்களிடமிருந்து கல்யாண ஆடை முதல் செருப்பு வரை வாங்கி போட்டுக்கிட்டு,உன்னுடைய கல்யாண செலவை அவர்களிடம் சிதனமாக வாங்கிக் கொண்டு, உன் குடும்பத்தாரும் உன் உறவினரும் உன் நண்பர்களும் அவர்கள் கொடுத் சாப்பாட்டை திண்ணுட்டு, அவர்களின் வீட்டு பொண்ணை கல்யாணம் பண்ணி அதுவும் நகை துணிமனிகளுடன்

வீட்டுக்கு தேவையான பாத்திரங்களுடன். போதாதற்கு உனக்கு பைக்கு அல்லது கார் பாரிய தொளிலானால் கார் என்று இவ்வளவையும் உனக்கு கொடுத்து

உன்னை நம்பி வந்த மனைவியை நீ எப்படி நடத்துகிறாய் உன் பெற்றோர் அவளை எப்படி நடத்துகிறார்கள்.

என்று சிந்தித்து பார். (கண்ணியத்திற்குரிய அவர்களை) உன் மனைவியை மிரட்ட அதிகாரம் பண்ண

உனக்கு அருகதை இருக்கிறது. (மார்க்கத்துக்கு முரணான காரியத்தைத்தவிர)நீ நியாயமான மனிதனாய் இருந்தால் – நரகம் என்பது அநியாயக்காரர்களுக்கு நிச்சயம் உண்டு என்ற

நீ நம்பினால்சிந்தித்து பார்த்து செயல்படு. உண்மையான ஆம்பிள்ளையாக இருப்போம் – சொந்த உழைப்பில் வாழ்வோம் – இஸ்லாத்தை பேணுவோம்

உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து. உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து உண்மையான முஸ்லிமாக மரணிப்போம்.

அல்லாஹ்விடம் நாம் நரகத்தை விட்டும் பாதுகாப்பு தேடுவோமாக!!!!முதலில் இதை பற்றி நாம் வாய் கிழிய பேசுவதற்கு முன் - நாம் சீதனம் வாங்காமல் திருமணம் செய்தோமா;

(கண்டிப்பாக உங்கள் நண்பன் பொலிஸ் நான் வாங் மாட்டேன் இறைவன் என்னை பாதுகாப்பானாக) நான் சீதனத்தை வெறுப்பவன்

அல்லது அறியாத பருவத்தில் வாங்கியிருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து அதை திரும்பவும் அந்த பெண் வீட்டாரிடையே கொடுத்து விட்டோமா; நமது பிள்ளைகளுக்கு நாம் சீதனம் வாங்காமல் அல்லது சீதனம் கொடுக்காமல் திருமணம் செய்து வைத்தோமா என்பதையெல்லாம் சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

ஏனென்றால் அல்லாஹ் திருமறையில் நீங்கள் செய்யாததை ஏன் மற்றவர்களுக்க சொல்கிறீர்கள் என கடும் கோபம் கொள்கிறான்.முதலில், பெண்களுக்கு அல்லாஹ் ஏன் மஹர் கொடுத்து திருமணம் செய்ய சொல்கிறான் ;

மஹர் கொடுக்காமல் - வரதட்சனை வாங்கி திருமணம் செய்வதால் முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்படும் கடுமையான விளைவுகள் என்னென்ன என்ற அடிப்படையான விழயங்களை ஒவ்வொர முஸ்லிமும் அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

சந்திப்போம் - உங்கள் நண்பன் போலிஸ்
நன்றி saynotodowry .blogspot .com   

கருத்துகள்